சென்னை: த்ரிஷா நடிக்க வந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் த்ரிஷா. அதன் பிறகு மவுனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். சாமி படம் மூலம் பிரபலமானார். த்ரிஷா நடிக்க வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் அவர் கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
மவுனம் பேசியதே, அதையடுத்து நடித்த மனசெல்லாம் படங்கள் சரியாக ஓடாததால் சினிமாவில் இருந்து விலகிவிடலாமா என்ற யோசனையில் இருந்தார் த்ரிஷா. சாமி படம் ஹிட்டானதால் தொடர்ந்து சினிமாவில் இருக்க முடிவு செய்தார். சாமியும் ஹிட்டாகாமல் இருந்திருந்தால் மனம் நொந்து சினிமாவில் இருந்து வெளியேறியிருந்திருப்பார்.
திரையுலகில் இத்தனை ஆண்டுகளாக பிசியான ஹீரோயினாகவே இருக்கும் த்ரிஷாவுக்கு நடிகர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகைகள் வெயிட் போடுவதும், குறைவதுமாக இருப்பார்கள். ஆனால் த்ரிஷாவோ நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் ஸ்லிம்மாக சிக்கென்று உள்ளார். அவரின் இந்த ரகசிய்தை தெரிந்துகொள்ள பலர் ஆவலாக உள்ளனர்.