சென்னை: டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பணம் கொடுத்து டிடிவி தினகரன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விடலாம், ஆனால் அது நீடிக்காது என்றார். டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தினகரன் 5 மாதமாக வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பணம் கொடுத்து டிடிவி தினகரன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விடலாம், ஆனால் அது நீடிக்காது என்றார். டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தினகரன் 5 மாதமாக வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.