LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


ஐஸ்வர்யா ராய்க்கும், நாத்தனாருக்கும் இடையே சண்டையாமே

Posted in forum 'EyesTube'

Report Nine

Report Nine
User Support

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது நாத்தனார் ஸ்வேதாவுக்கும் இடையே பிரச்சனையாம். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது படங்கள், விளம்பர படங்களில் பிசியாக உள்ளார். தனது மகள் ஆராத்யா மீது அதிக அக்கறை கொண்டுள்ளார். இனி மகளை மீடியாக்கள் முன்பு காட்டுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று பல காலமாக பேசப்படுகிறது. மகளை மாமியார் அருகில் கூட செல்ல விடுவது இல்லையாம் ஐஸ். மாமியார் மட்டும் அல்ல நாத்தனார் ஸ்வேதா நந்தாவுடனும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சனையாம். இருவரும் முகம் கொடுத்து பேசிக் கொள்வது இல்லை என்கிறார்கள்.

கிரிக்கெட் வீரர் கோஹ்லி, நடிகை அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஸ்வேதா நந்தா ஆகியோர் வந்திருந்தனர். புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோது ஐஸ்வர்யா ராயும், ஸ்வேதா நந்தாவும் அருகருகே நின்றும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளவில்லை. ஆளுக்கு ஒரு பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
30/12/2017, 6:54 amPost 1
You cannot reply to topics in this forum